புள்ளியியல் நிபுணர் டத்தோ ஷாரி அப்துல் ரஹ்மான் காலமானார்!

top-news
FREE WEBSITE AD


புத்ராஜெயா, ஜூன் 4: நாட்டின் நான்காவது தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோ ஷாரி அப்துல் ரஹ்மான் நேற்று காலமானார் என்று மலேசிய புள்ளியியல் துறை (DOSM) தெரிவித்துள்ளது.

1995 முதல் 2004 வரை பதவியில் இருந்த ஷாரி சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோ காஜா 11 முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவார் என்று புள்ளியியல் துறை இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மே 1, 1971 இல் புள்ளியியல் நிபுணராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஷாரியின் மறைவு குறித்து தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் சமூக-பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்டமிடலைத் தயாரிக்க உதவியதில் புள்ளியியல் அமைப்பை வலுப்படுத்தியதில் சிறந்து விளங்கியவர் ஷாரி  என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *