சிங்கப்பூர் கொடி ஏந்திய சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல்
- Surendran Sumdraraj
- 26 Jun, 2026
தெஹ்ரான், ஜூன் 26 –
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சிங்கப்பூர் கொடி ஏந்திய சரக்கு கப்பல் மீது ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின்படி, 'எவர் லவ்லி' (Ever Lovely) என்ற சரக்கு கப்பல் ஓமான் கடற்கரைக்கு அருகே பயணித்தபோது ஆளில்லா வெடிகுண்டு விமானம் (ட்ரோன்) மூலம் தாக்கப்பட்டது. தாக்குதலில் கப்பலின் கட்டுப்பாட்டு பகுதி சேதமடைந்தாலும், அதில் பயணித்தவர்களுக்கு உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை.
தாக்குதலுக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, ஈரான் அனுமதிக்காத கடல் வழித்தடங்களைப் பயன்படுத்தும் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, இந்தத் தாக்குதல் திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிலைமை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



