கம்போடியா முதலில் போர்நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என தாய்லாந்து வலியுறுத்து

top-news

தாய்லாந்து, டிச. 17-

தாய்லாந்து, கம்போடியாவுடனான எல்லை மோதலை நிறுத்த கம்போடியா முதலில் போர்நிறுத்தம்அறிவிக்க வேண்டும் என்று தீர்க்கமாக வலியுறுத்தியுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் மோதலுக்குப் பிறகு, எல்லைப் பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

தாய்லாந்து வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மராட்டி நலிதா அண்டமோ, பாங்காக்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தாய்லாந்து எல்லைக்குள் ஆக்கிரமிப்பு செய்த தரப்பாக இருப்பதால், கம்போடியா முதலில் போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்" என்றார்.

அத்துடன், எல்லைப் பகுதியில் உள்ள நிலமின்களை அகற்றும் முயற்சியில் கம்போடியா 'உண்மையாக' ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இம்மாதம் மீண்டும் தொடங்கிய தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கிடையிலான மோதலில், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 800,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *