ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா?
- Surendran Sumdraraj
- 21 May, 2026
வாஷிங்டன், மே 21-
ஈரான் போரின் போது அமெரிக்க ராணுவம் 42 விமானங்களை இழந்ததாக வெளியாகியுள்ள காங்கிரஸ் அறிக்கை சர்வதேச அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதலின் போது நடைபெற்ற “Operation Epic Fury” நடவடிக்கையில், பல்வேறு ராணுவ விமானங்கள் சேதமடைந்ததோ அல்லது அழிக்கப்பட்டதோ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் F-15E போர் விமானங்கள், F-35A ஸ்டெல்த் ஜெட், KC-135 எரிபொருள் நிரப்பு விமானங்கள், MQ-9 Reaper ட்ரோன்கள் உள்ளிட்டவை அடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் ஆய்வு சேவை (CRS) தயாரித்ததாகக் கூறப்படும் இந்த அறிக்கையில், விமான இழப்புகளின் மதிப்பு சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 29 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், முழுமையான அதிகாரப்பூர்வ விவரங்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை இன்னும் வெளியிடவில்லை.
அதே நேரத்தில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் Ed Case, செனட் விசாரணைக் கூட்டத்தில் பேசுகையில், “ஈரான் போரில் அமெரிக்கா சுமார் 39 விமானங்களை இழந்துள்ளது” என்று குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கையை பெண்டகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



