இனங்களுக்கிடையிலானஒற்றுமையே நாட்டின் பலம்! இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து!
- Shan Siva
- 26 May, 2024
நாட்டில் ஒற்றுமையை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இளைஞர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய அளவிலான 2024 ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தில் கலந்துகொண அன்வார் இதனைத் தெரிவித்தார்.
பல்வேறு இனங்களை ஒன்றிணைத்து நாட்டின் சுதந்திரத்தை அடைவதில் கடந்த கால தலைவர்களின் போராட்டங்களும் பங்களிப்புகளும் எப்போதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.
ஒற்றுமையின் உணர்வால் ஒரு நாடு உயரும். அதேவேளை பிளவு மற்றும் இன முரண்பாடுகளால் ஒரு நாடு வீழ்ச்சியடையும் என்பதால், இந்த விஷயத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது இளைய தலைமுறையினரின் பொறுப்பு என்று அவர் கூறினார்.
இனங்களுக்கிடையிலானஒற்றுமையே நாட்டின் பலம் என்று அன்வார் கூறினார். இதற்காக, ஒற்றுமை உணர்வை தொடர்ந்து ஆதரித்த அனைத்து மலேசியர்களுக்கும் தனது மரியாதையையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *