புரியாமல் பிதற்றும் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர்! - YB THULSI MANOGARAN

top-news
FREE WEBSITE AD

சீனப் பள்ளிக்கு மதுபான நிறுவனம் நன்கொடை அளித்ததாக வெளி வந்த சச்சரவிற்கு அமைச்சரவை தெளிவான விளக்கத்தை வழங்கியும் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் Arvind Krishnan அறிக்கை வெளியிட்டிருப்பது அவரின் அறியாமையும் அரசியல் புரிதலும் இல்லாதவர் என்பதைத் தெரியப்படுத்துவதாகப் BUNTONG சட்டமன்ற உறுப்பினர் THULSI MANOGARAN தெரிவித்துள்ளார். வரலாறுகளையும் இந்திய சமூகத்தைப் பற்றியும் பேசும் அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டை முன்னிருத்தி ம.இ.கா செயல்பட்டிருந்தால் தற்போது இந்தியர்களின் நலனுக்காகத் தாமும் அரசியலில் ஈடுபட வேண்டிய தேவையும் இருந்திருக்காது என THULSI MANOGARAN தெரிவித்துள்ளார்.

எந்த அரசியல் கட்சியும் கல்விக்கூடங்களில் மதுவை ஊக்குவிப்பதில்லை என்பதை உணர்ந்து ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் Arvind Krishnan அறிக்கை வெளியிட வேண்டும் என THULSI MANOGARAN வலியுறுத்தினார். கல்வி அமைச்சு, பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாளர் வாரியம் என அரசு மற்றும் அரசு சாரா ஆணையங்கள் தொடர்பாக எந்தவொரு புரிதலும் இல்லாது ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் Arvind Krishnan போன்றவர்கள் விளம்பரத்திற்காக அறிக்கைகள் வெளியிட வேண்டிய அவசியமில்லை என THULSI MANOGARAN எச்சரித்தார். 

அரசியல் காழ்ப்புணர்வின் வெளிப்பாட்டுக்கு அறிக்கை வெளியிடும் இவர்களைப் போன்றவர்கள் ஆக்கப்புர்வமானத் தெளிவான, மக்களுக்குப் பயனுள்ள நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ம.இ.காவுக்கு THULSI MANOGARAN நினைவுருத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *