ஆப்பிள் சிஇஓ பதவியில் இருந்து விலகும் டிம் குக்… புதிய தலைமை மாற்றம் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் முக்கிய தலைமை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக சிஇஓ பதவியில் இருந்து நிறுவனத்தை வழிநடத்திய டிம் குக், தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, டிம் குக் 2026 செப்டம்பர் 1 முதல் சிஇஓ பதவியை விட்டு விலகுகிறார். ஆனால் அவர் நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்தே இருந்து நிர்வாக தலைவர் (Executive Chairman) பதவியை ஏற்கிறார்.

அவருக்கு பதிலாக தற்போது ஆப்பிளின் ஹார்ட்வேர் இன்ஜினியரிங் பிரிவை வழிநடத்தி வரும் ஜான் டெர்னஸ் புதிய சிஇஓவாக பொறுப்பேற்க உள்ளார்.

2011ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸுக்கு பிறகு சிஇஓவாக பொறுப்பேற்ற டிம் குக், தனது காலகட்டத்தில் ஆப்பிளை மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நிறுவனமாக மாற்றியவர் என பாராட்டப்படுகிறார். அவரது தலைமையில் ஆப்பிள் உலகின் முதல் டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டிய நிறுவனமாக மாறியது மட்டுமல்லாமல், தற்போது 4 டிரில்லியன் டாலருக்கும் மேல் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

மேலும், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் போன்ற புதிய தயாரிப்புகளையும், டிஜிட்டல் சேவைகள் வளர்ச்சியையும் அவர் முன்னெடுத்தார்.

இதற்கிடையில், புதிய சிஇஓவாக பொறுப்பேற்கும் ஜான் டெர்னஸுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் போட்டியைச் சமாளிக்கும் சவால்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த தலைமை மாற்றம், ஆப்பிளின் எதிர்கால வளர்ச்சி பாதையை நிர்ணயிக்கும் முக்கிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *