PN கட்சிகள் பாஸ் சின்னத்தைப் பயன்படுத்துவது தவறல்ல! - பாஸ் துணைத் தலைவர்

- Shan Siva
- 08 Aug, 2024
குவா மூசாங், ஆகஸ்ட் 8:
தேர்தலில் போட்டியிடும் போது பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) கீழ் உள்ள மற்ற கட்சிகள்
பாஸ் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிப்பது புதிதல்ல என்று பாஸ் துணைத் தலைவர்
டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.
இது ஒரு பிரச்சினை அல்ல என்றும் கிளந்தான் மற்றும் திரெங்கானு
உள்ளிட்ட பல இடைத்தேர்தல்களில் இது நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
உதாரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத் தேர்தலில், மச்சாங்
நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் பாஸ் சின்னத்தைப்
பயன்படுத்தினார்.
இந்த நடவடிக்கை புதியதல்ல. பெரிக்காத்தான் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, குறிப்பாக
கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் பாஸ் சின்னத்தைப் பயன்படுத்த நாங்கள்
ஒப்புக்கொண்டோம் என்று அவர் நேற்றிரவு இங்குள்ள சுங்கை தேராவில்
ஒரு செராமாவில் கூறினார்.
ஏற்கெனவே அறிவித்தபடி பெர்சத்து வேட்பாளருக்குப் பதிலாக, பாஸ் வேட்பாளரை
நிறுத்தியதன் மூலம் நெங்கிரி வாக்காளர்களை பெரிக்காத்தான் ஏமாற்றியதாக பாரிசான்
நேஷனல் தலைவர்களின் அறிக்கைக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
"எங்களைப்
பொறுத்தவரை, நெங்கிரி
இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம், இந்த முறை வாக்களிக்க வருபவர்களின் சதவீதம் அதிகமாக
இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
கிளந்தானுக்கு வெளியில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை ஆகஸ்ட் 17 வாக்குப்பதிவு நாளில் திரும்பி வருமாறு பெற்றோர்கள் அழைக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *