கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில்‌ DAP வெற்றிபெறும்! – மகாதீர்

top-news

கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியில்‌ உள்ள மலாய்க்காரர்கள்‌ மத்தியில்‌ பிளவு ஏற்பட்டிருக்கிறது. அதனால்‌, அத்தொகுதி இடைத்‌தேர்தலில்‌ ஜசெகதான்‌ வெற்றி பெறும்‌ என்று, முன்னாள்‌ பிரதமர்‌ டாக்டர்‌ மகாதீர்‌ முகமது கணிப்புத்‌ தெரிவித்திருக்கின்றார்‌.

 அளவுக்கு அதிகமான மலாய்க்‌ கட்சிகள்‌ உருவாகி இருப்பதனால்‌, மலாய்க்கார வாக்காளர்கள்‌ மத்தியில்‌  வாக்குகள்‌ சிதறி இருப்பதாக அவர்‌ கூறியுள்ளார்‌.

16 வது  பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல்  தற்போதைய 152 எம்.பி.க்கள் உட்பட பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு பல வழிகள் உள்ளன" என்று பாரிசான் நேஷனல் (பிஎன்) தலைவருமான அவர் மேற்கோள் காட்டினார்.

“தொகுதியில்‌ சீனர்களைக்‌ காட்டிலும்‌ மலாய்க்கார வாக்காளர்களின்‌ எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்‌, மலாய்க்காரர்கள்‌ பிளவுப்பட்டுள்ளனர்‌. சீனர்கள்‌ ஒன்றுபட்டுள்ளனர்‌. ஆதலால்‌, ஜசெக வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள்‌ அதிகம்‌ இருக்கிறது”என்று, நேற்று நடந்த புத்ரா கட்சியின்‌ நோன்புப்‌ பெருநாள்‌ உபசரிப்பில்‌ கலந்து கொண்ட பின்னர்‌ செய்தியாளர்களிடம்‌ பேசும்போது மகாதீர்‌ தெரிவித்தார்‌.

“முன்பு மலாய்க்காரர்கள்‌ அம்னோவின்‌ கீழ்‌ ஒன்றுபட்டிருந்தனர்‌. தேர்தல்‌ நடைபெறும்‌ ஒவ்வொரு முறையும்‌ மக்களவையில்‌ மூன்றில்‌ இரண்டு பெரும்பான்மையை எங்களால்‌ பெறமுடிந்தது. எனினும்‌, நாம் பிளவுப்படுத்தப்பட்டோம்‌. அன்று முதல்‌, புத்ரா கட்சி உட்பட மலாய்க்காரர்கள்‌ அடிப்படையிலான கட்சிகள்‌ அதிகமாக உருவாகின” என்று மகாதீர்‌ கூறினார்‌.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

pbezpq