மது போதையில் வாகனம் ஓட்டியவரால் போக்குவரத்து போலீஸ்காரர் படு காயம்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஜூலை 15: ஜொகூர் பாரு கிலோமீட்டர் 3.6 ஜாலான் பந்தாய் என்ற இடத்தில், குடிபோதையில் சந்தேகப்படும்படியாக ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மோதியதில், போக்குவரத்து காவலர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

நேற்று காலை 7.05 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், அந்த போலீஸ்காரர் இடுப்பு எலும்பு முறிவு மற்றும் முகம், கன்னம் மற்றும் வலது கையில் காயத்திற்கு உள்ளானதாக ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

 முன்னதாக கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்த போலீஸ்காரர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

இருப்பினும், விபத்துக்குள்ளான கார் இழுத்துச் செல்லப்பட்டபோது, ​​பின்னால் வந்த மற்றொருவர் திடீரென பாதையை மாற்றி, இழுவை வண்டிக்கு அருகில் நின்றிருந்த காவலர் மீது மோதியதாக ஏசிபி கூறினார்.

இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர் இழுத்துச் செல்லப்பட்ட காரின் முன் கண்ணாடி மீது மோதியதால் அவர் சாலையின் நடுவில் விழுந்தார்," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *