சட்டென சரிந்த மரம்... மயிரிழையில் உயிர் தப்பிய ஆடவர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 18: கோலாலம்பூர், லாத்தார் நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் பாதைக்கு அருகே, ஜாலான் கோலாலம்பூர்-ரவாங், 16 வது மைலில் நேற்று ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற காரின் மீது திடீரென மரம் சரிந்து விழுந்ததில், மயிரிழையில் உயிர் தப்பினார்,

இந்தச் சம்பவம் குறித்து மதியம் 1.20 மணிக்கு போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக கொம்பாக் மாவட்ட போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் Abang Kaderi Abang Waslu தெரிவித்தார்.

ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழு சம்பவ இடத்திற்கு வந்து விழுந்த மரத்தை வெற்றிகரமாக அகற்றியது. அதிர்ஷ்டவசமாக, ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனத்தை ஓட்டிச் சென்ற 38 வயதுடைய சம்பந்தப்பட்ட நபருக்க எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று அவர் இன்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *