டீசல் திருட்டுக்கு எதிராக வலுவான நடவடிக்கை அவசியம்! - அன்வார் அறிவுறுத்து

top-news
FREE WEBSITE AD

லபுவான்: நாடு முழுவதும் டீசல் துஷ்பிரயோகம் மற்றும் திருட்டுக்கு எதிராக அமலாக்க அமைப்புகளின் வலுவான நடவடிக்கைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசம் ஏமாற்றப்படுவதை தாங்கள் பார்க்க விரும்பவில்லை  என்று குறிப்பிட்ட அவர், டீசல் திருட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சோதனைகளை முடுக்கிவிட வேண்டும் என்று கூறினார்.

டீசலைப் பெரிதும் நம்பியுள்ள சபா, சரவாக் மற்றும் லாபுவான் மக்களின் நலன்களைப் பாதுகாக்க டீசல் திருட்டைத் தடுப்பது அவசியம் என்று அன்வார் வலியுறுத்தினார். 

டீசல் திருட்டு மற்றும் முறைகேடு குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *