மலேசிய FA கால்பந்தாட்ட இறுதி போட்டியில் பலத்த பாதுகாப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜோகூர் டாருல் தஸிம்மிற்கும் சிலாங்கூர் எஃப்சிகும் இடையே வரும் சனிக்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவிருக்கும்  FA கால்பந்தாட்ட இறுதி போட்டியின் போது கலவரம் ஏதும் ஏற்படாமல் நல்ல முறையில் இந்தப் போட்டியை காண வேண்டும் என்று காவல்துறையினர் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுமார் 85 ஆயிரம்  ரசிகர்கள் முன்னிலையில் எப் ஏ கால்பந்தாட்டத்தின் இறுதி ஆட்டம் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இறுதி ஆட்டம் நடைபெறும் பொழுது கால்பந்தாட்ட மைதானத்தின் உள்ளே, வெளியே சுமார் 2400 பாதுகாவலர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் அதே நேரம் பாதுகாப்பும் பலப்படுத்தப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் ஈசா தெரிவித்தார்.

மைதானத்திற்குள் அனுமதி இல்லாமல் கூர்மையான பொருட்கள், ட்ரோன் மற்றும் வெடிபொருட்கள்  தடை விதிக்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் அனுமதிச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள  நுழைவாயிலில் மட்டுமே ரசிகர்கள் செல்லுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *