அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு! இக்வானுல் முஸ்லிமின் தீவிரவாத அமைப்பாக அறிவிப்பு

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

வாஷிங்டன், நவ. 25-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இக்வானுல் முஸ்லிமின் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக (FTO) வகைப்படுத்தும் செயல்முறையைத் தொடங்கும் நோக்கத்துடன், ஓர் உத்தரவை (எக்ஸிக்யூட்டிவ் ஆர்டர்) கையெழுத்திட்டார். இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள தோழமை நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் முக்கியமான விடயமாகக் கருதப்படுகிறது.

உத்தரவில் குறிப்பாக லெபனான், எகிப்து, ஜோர்டானில் உள்ள இக்வானுல் முஸ்லிமின் அமைப்பின் பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. "இந்த உத்தரவு, இக்வானுல் முஸ்லிமின் சில பிரிவுகள் அல்லது பகுதிகளை FTO-ஆக வகைப்படுத்துவதற்கான செயல்முறையை ஏற்படுத்துகிறது" என்று உத்தரவு தெரிவிக்கிறது.

இந்த முடிவுக்கு காரணமாக, 2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, லெபனானின் இக்வானுல் முஸ்லிமின் அமைப்பின் ராணுவப் பிரிவு ஹமாஸ், ஹெஸ்புல்லாவுடன் இணைந்து இஸ்ரேலுக்கு ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *