தந்தையை கத்தியால் தாக்கிய மாணவன் கைது!

top-news
FREE WEBSITE AD

வங்சா மாஜு, நவ 19: 17 வயது மாணவன் ஒருவன் தனது தந்தையுடன் ஏற்பட்ட தவறான புரிதலின் காரணமாக அவரைக் காயப்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் இன்று உறுதிப்படுத்தினர்.

சஒரு கத்தியால் தனது தந்தையின் முதுகு மற்றும் இடது கையில் சம்பந்தப்பட்ட அந்த மாணவன் காயம் ஏற்படுத்தியதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார். காயங்களுக்கு தந்தை உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் அந்த மாணவனுக்கு நவம்பர் 19 வரை மூன்று நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக முகமது லாசிம் கூறினார்.

 ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 மற்றும் குற்றவியல் மிரட்டலுக்கான பிரிவு 506 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *