பள்ளிச் சீருடையில் இரத்த வெள்ளத்தில் மாணவி!
- Shan Siva
- 26 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 26: பினாங்கு குளுகோரில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் தரை தளத்தில் நேற்று காலை 13 வயது சிறுமி இறந்து கிடந்தார். போலீசார் தவறான நடத்தைக்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது என்று தீமோர் லாவுட் காவல்துறைத் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.
சிறுமி பள்ளிச் சீருடையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை காலை 9.20 மணியளவில் பொதுமக்கள் கண்டெடுத்தனர். அருகில் ஒரு கருப்புப் பை கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் எந்தக் குற்றச் செயல்களும் இல்லை என்றும், உடல் பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் ரோசாக் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



