ஜொகூரில் சட்டவிரோதமாகக் கொட்டிய ரசாயனக் கழிவுகளை சுத்தம் செய்ய ஒரு வாரத்திற்கு மேல் ஆகும்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, செப் 11: ஜொகூர்,  தியோங் நாம் தொழில் பூங்கா மற்றும் டேசா டிராபிகா தொழிற்பேட்டையில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட ரசாயனக் கழிவுகளை சுத்தம் செய்ய ஒரு வாரத்துக்கும் மேல் ஆகும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் துப்புரவு பணி மற்றும் கழிவுகளை அகற்றும் பணி நிறைவடையும் என்று அவர் கூறினார்.

மாசுபாட்டின் ஆதாரமாக அடையாளம் காணப்பட்ட இரண்டு இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஒரு ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், பணிகள் நடைபெறும் போது, ​​அப்பகுதிக்குள் நுழைவதையோ, இருப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

புகையை சுவாசிப்பதால் மயக்கம், குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மார்பு வலி போன்ற அசௌகரியம் அல்லது அறிகுறிகளை அனுபவிப்பவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் ஜொகூர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவருமான அவர் கூறினார்.

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்டவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவுகளில் உள்ளவர்களும் அந்த பகுதிகளில் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *