மானியவிலை எரிபொருள் கடத்தல்! 1,350 லிட்டர் டீசல் பறிமுதல்
- Shan Siva
- 06 May, 2026
கோத்த கினபாலு, மே 6: மானிய விலையில் எரிபொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், மாற்றியமைக்கப்பட்ட எரிபொருள் தொட்டியுடன் கூடிய ஒரு லாரி தாவாவில் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று பொது நடவடிக்கைப் படையினர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்திற்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாலை 7.30 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சகத்தின் சபா கிளை தெரிவித்தது.
சுமார் 1,350 லிட்டர் டீசலை ஏற்றிச் சென்ற அந்த லாரியும், கடத்தல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சகம் கூறியது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் RM104,256.25 என்றும், அவை 1961 ஆம் ஆண்டின் வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக அமைச்சகத்தின் சபா தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அது தெரிவித்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



