பூடி மடானி ரோன்95!
- Muthu Kumar
- 24 Sep, 2025
வரும் செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து ஒரு லிட்டர் ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு உதவித் தொகை கொண்ட ரோன் 95 பெட்ரோலை பயன்படுத்த ஓட்டுநர் உரிமம் கொண்ட அனைத்து மலேசியர்களும் தகுதி பெறுகின்றனர். BUDI95 எனப்படும் BUDI MADANI RON95 திட்டத்தின் கீழ் இது அமலுக்கு வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ரோன்95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு இரண்டு ரிங்கிட் ஐந்து சென்னிலிருந்து ஒரு ரிங்கிட் 99 சென்னுக்குக் குறைப்பதன் வழி அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாக பிரதமர் கூறினார். புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திர சந்திப்பின் போது பிரதமர் இந்த அறிவிப்பைச் செய்தார்.
சாலைப் போக்குவரத்துத் துறை, ஜேபிஜே மற்றும் தேசிய பதிவுத் துறை, ஜேபிஎன்-இன் தரவுகள் அடிப்படையில் ஒரு கோடியே 16 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உள்ளடக்கி வருமான அளவைப் பொருட்படுத்தாமல் இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ரோன்95 திட்டத்தின் கீழ் லிட்டருக்கு ரிம.1.99 என்ற விலையில் ரோன்95 பெட்ரோல் விலையை அமல்படுத்துவது, மக்களைப் பாதுகாப்பதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் உறுதியை நிரூபிக்கும் ஒரு துணிச்சலான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். எளிமையான, நியாயமான மற்றும் நேர்மை சார்ந்த பொறிமுறையின் மூலம், மலேசியர்கள் தங்கள் பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல் மானியங்களின் வாய்ப்பைப் பலன்களை நேரடியாக அனுபவிக்கும் பெற்றுள்ளனர்.
மலேசியாவில் எரிசக்தி வள மேலாண்மையின் எதிர்காலம் மிகவும் நிலையானதாகவும் சமூக நீதியை நோக்கியதாகவும் இருக்கும் என்பதையும் இந்த நடவடிக்கை குறிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், நாடு தொடர்ந்து வளர்ச்சியடைவதையும் அதன் மக்கள் வளமாக இருப்பதையும் உறுதி செய்வதில் அரசாங்கம் எப்போதும் உறுதிபூண்டுள்ளது என்ற நம்பிக்கையை மலேசியர்கள் பெறலாம்.
சவாலான நிதி நிலைமைகள் இருந்தபோதிலும் மக்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கும் கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய தேசிய நிர்வாகத்தின் செயல்திறனுக்கான அங்கீகாரமாகவும் இது அமைகிறது.
சாலைப் போக்குவரத்து இலாகா (ஜேபிஜே) தேரியப் பதிவு இலாகா (ஜேபிலன்) ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில் பூடி 95 18 மில்லியன் மக்களுக்கு அல்லது வாகனமோட்டிகளுக்குப் பயள்தரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.ஒரு வாகனமோட்டியின் வருமானம் எவ்வளவு என்ற பாகுபாடு இன்றி அனைத்துப் பிரஜைகளுக்கும் பிறச் சலுகை வழங்கப்படுகிறது.
செல்லுபடியாகும் வாகனமோட்டும் லைசென்சுகளை வைத்திருப்பது கட்டாயமாகும்.மை கார்டு வைத்திருப்போர் இயல்பாகவே பூடி 95 பலன்களைப் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றனர் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



