கருடன் பட வெற்றியால் இனி தமிழ் சினிமாவில் சூரி சாம்ராஜ்யம் தான்!

top-news
FREE WEBSITE AD

சூரி நடிப்பில் நேற்று வெளியான கருடன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை முதல் நாளிலேயே நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூரி படத்தை தியேட்டருக்கு சென்று யார் பார்க்கப் போகிறார் என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சூரி படத்துக்கு முதல் நாளிலேயே இப்படி ஒரு ஓப்பனிங் கிடைத்திருப்பது தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

காமெடி நடிகர்களான சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்வதே பெரிய விஷயமாக உள்ளது. சமீபத்தில் வெளியான சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு திரைப்படம் ஃபிளாப் ஆன நிலையில், சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது.

வெற்றிமாறனின் உதவி இயக்குனரான துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ஆர்.வி. உதயகுமார், சமுத்திரகனி, ஷிவதா, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் முதல் நாள் அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் வசூலை ஈட்டி நல்ல ஓப்பனிங் கொடுத்திருக்கிறது. மேலும், அந்தப் படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டிப்பாக இந்த படம் 30 கோடி முதல் 50 கோடி வரை வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூரியை ஹீரோவாக மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பது முதல் நாள் வசூலிலேயே தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

சூரி நடிப்பில் அடுத்து வெளியாக காத்திருக்கும் விடுதலை 2 மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி உள்ள கொட்டுக்காளி படங்களின் ரிலீஸுக்கு கருடன் வெற்றி ரொம்பவே முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *