பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய வீரர் முஹம்மது ஜியாத் தங்கம் வென்று சாதனை!

top-news
FREE WEBSITE AD

ஜப்பானின் கோபியில் நடந்த 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஷாட் புட் F20 போட்டியின் ஆடவர் பிரிவில் சாம்பியனாக  தேசிய பாரா தடகள வீரர் முஹம்மது ஜியாத் சோல்கேஃப்லி தனது மூன்றாவது தனிப்பட்ட உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

கோபி யுனிவர்சியேட் மெமோரியல் ஸ்டேடியத்தில் ஜியாத் 17.43 மீட்டர் (மீ) எறிந்து, லண்டனில் நடந்த 2017 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் அவரின் முந்தைய சாதனையான 17.29 மீ என்ற ஆசிய சாதனையை முறியடித்தார்.  மேலும்  இந்த சாம்பியன்ஷிப்பில் தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தையும் வென்றார். 
.
Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah என்று உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று முறை வென்ற தங்கப் பதக்கத்துடன், இன்ஸ்டாகிராமில்  தனது வெற்றி காணொளியுடன் இணைக்கப்பட்டு பதிவிட்டுள்ளார் முஹம்மது ஜியாத்.

பிரெஞ்சு குண்டு எறிதல் வீராங்கனை சோனே லூகா 15.29 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், ஈக்வடாரின் ஜோர்டி பாட்ரிசியோ 15.80 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும், சக மலேசியாவின் முகமது அலிஃப் முகமது அவி 13.48 மீ தூரம் எறிந்து ஏழாவது இடத்தையும் பெற்றனர்.

2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் மே 17 முதல் 25 வரை நடைபெறுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *