முகைதீன் 3 ஆர் சர்ச்சை: விசாரணை முடிந்தது!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மீதான விசாரணை முடிந்துவிட்டதாகவும், சட்டத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்  காவல்துறை  தெரிவித்துள்ளது.

இனம், மதம் மற்றும் ராயல்டி  தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை முகைதீன் எழுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை மையம் கொண்டுள்ளது.

இதுவரை நடந்த விசாரணையில் 66 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

முன்னதாக முகைதீனிடம்  வாக்குமூலம் பெறும் போது அவரிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் முகைதீன் பதிலளித்தார் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக ரஸாருடின் கூறினார்.

 மேல்  நடவடிக்கைக்காக விசாரணை ஆவணம்  சட்டத்துறை  அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *