Hui Ying, Sivakumar, Kelvin ஆகியோருக்கு DAP கட்சியில் உயர் பதவிகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 24:  துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங், டிஏபி மத்திய செயற்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் இன்று அறிவித்தார்.

நேற்று நடைபெற்ற சிஇசி கூட்டத்திற்குப் பிறகு கட்சியின் உயர்மட்டத் தலைமைக்கு நியமிக்கப்பட்ட 10 டிஏபி உறுப்பினர்களில் அவரும் ஒருவர் என்று லோக் கூறினார்.

நியமிக்கப்பட்ட மற்றவர்களில், மனிதவளத்துறை முன்னாள் அமைச்சர் வி. சிவகுமார், பண்டார் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் யி, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வி. பப்பாராய்டு, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் எம். துளசி திவானி மற்றும் ஸ்தூலாங் சட்டமன்ற உறுப்பினர் சென் கா எங் ஆகியோர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னாள் டாமன்சாரா நாடாளுமன்ற டோனி புவாவை டிஏபியின் ஒழுங்குமுறைக் குழுவின் தலைவராக நியமிக்கவும் சிஇசி ஒப்புக்கொண்டதாக லோக் கூறினார்.

லிம் குவான் எங்கிற்குப் பிறகு கட்சியின் இரண்டாவது ஆலோசகராக செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கோக் வையையும், DAP-யின் நாடாளுமன்றத் தலைவராக சோங் சியெங் ஜென்னையும் CEC நியமித்தது.

இதற்கிடையில், சட்டத்துறை முன்னாள் துணை அமைச்சர் ராம்கர்பால் சிங் DAP-யின் சட்டப் பணியகத் தலைவராக நியமிக்கப்பட்டார்!

Lim Hui Ying dilantik ke jawatankuasa eksekutif pusat DAP bersama sembilan ahli lain termasuk V. Sivakumar dan Kelvin Yii. Tony Pua dilantik ketua disiplin, manakala Ramkarpal Singh mengetuai biro undang-undang parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *