இங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் தேதி பொது தேர்தல்! ரிஷி சுனக் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 04-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது.

இந்நிலையில் நேற்று அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஜூலை 4 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி கூறியது, பிரதமர் எப்போது தேர்தல் வைத்தாலும் அழைத்தாலும் நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *