ஜூலை 6 சுங்கை பக்காப் இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 6 :  சுங்கை பக்காப் இடைத்தேர்தல் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் (EC) இன்று அறிவித்துள்ளது.

இன்று காலை தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷரோம் இதனை அறிவித்தார்.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் என்றும், முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார். 

சுங்கைப் பக்காப் சட்டமன்ற உறுப்பினர் பாஸ் கட்சியைச் சேர்ந்த   Nor Zamri Latiff கடந்த மே 24 -ஆம் தேதி காலமானதை அடுத்து, அந்தத் தொகுதி காலியானது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரான  அவர்,  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலின் போது சுங்கை பக்காப் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பக்காத்தான் ஹராப்பானின் நூர்ஹிதாயா சே ரோஸை 1,563 வாக்குகள் பெரும்பான்மையுடன் வென்றார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *