காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.இங்கு அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனையடுத்து அவரது உடலுக்கு இன்று இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது.

காமராஜரின் தீவிர தொண்டராக குமரி அனந்தன் அறியப்பட்டார். குறிப்பாக தமிழ் மொழிக்காக அவர் எடுத்த முன்னெடுப்புகள் இன்றுவரை நினைவுக்கூறப்படுவதாக இருக்கிறது. ஒரே ஒரு முறைதான் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த 5 ஆண்டு காலத்தில் அவர் தமிழுக்காக ஆற்றிய பங்களிப்புகள் இன்றுவரை தமிழர்களை தலை நிமிர செய்திருக்கிறது என்று அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமைக்காக தீவிரமாக இவர் போராடியுள்ளார். அதற்கான உரிமையை பெற்று தந்திருக்கிறார். அதனால்தான் இன்றும் தமிழக எம்பிக்கள் தமிழில் கேள்வி எழுப்பி பதிலை பெற முடிகிறது. விமானங்களில் தமிழில் அறிவிப்புகள், தபால் நிலையங்களில் தமிழில் படிவங்கள் கிடைக்க வேண்டும் என தமிழ் மொழியின் பரவலான அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடி அதில் வெற்றிக்கண்டவர்தான் குமரி ஆனந்தன்.

வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனையால் போராடி வந்த குமரி அனந்தன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்திய நேரப்படி 12.15 மணியளவில் அவர உயிரிழந்ததாக அறிப்பு வெளியாகியுள்ளது.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று அரசியல் தலைவர்கள் குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். இந்திய நேரப்படி மாலை 5 மணியளிவில் விருகம்பாக்கம் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *