சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினபாலு, ஜூலை 2: சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி நான்கு நிவாரண மையங்களில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பெனாம்பாங் கலாச்சார மையத்தில் நேற்று தங்க வைக்கப்பட்ட 67 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேருடன் ஒப்பிடும்போது 93 குடும்பங்களைச் சேர்ந்த 279 பேர் இன்று தங்கவைக்கப்பட்டனர்.

திவான் ஸ்ரீ புடட்டானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 25 குடும்பங்களில் இருந்து 116 பேருடன் ஒப்பிடும்போது  இன்று 34 குடும்பங்களில் இருந்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், துவாரனில் உள்ள மற்ற இரண்டு நிவாரண மையங்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கிடையில், சபா பொதுப்பணித் துறை ஓர் அறிக்கையில், ஜலான் லின்டாஸ் லுவாகன், சிபித்தாங்கின் KM0.5 முதல் KM1.55 வரை, சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் சாலை மூடப்பட்டுள்ளது.

இதனிடையே சபாவின் உள் பகுதியான  குவாலா பென்யு மற்றும் பியூஃபோர்ட் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *