இரண்டாவது ஓட்டுநர் இல்லாமல் பயணித்த 17 பேருந்துகளுக்கு சம்மன்!

top-news
FREE WEBSITE AD


புக்கிட் மெர்தஜாம்: இன்று அதிகாலையில் 300 கிமீ அல்லது 4 மணி நேரத்திற்கும் மேலான பயணங்களுக்கு இரண்டாவது ஓட்டுநர் இல்லாமல் பயணித்த 17 எக்ஸ்பிரஸ் மற்றும் சுற்றுலாப் பேருந்துகளுக்கு சாலை போக்குவரத்து துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பினாங்கு ஜேபிஜே இந்த வாகனங்களைக் குறிவைத்து சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  ஜுரு மற்றும் சுங்கை துவா சுங்கச்சாவடிகளில் நள்ளிரவில் தொடங்கி நான்கு மணி நேரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது அனைத்து பொது ப்போக்குவரத்து, குறிப்பாக விரைவுப் பேருந்துகள் உட்பட  போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *