சுங்கை பக்காப் இடைத்தேர்தல்... போலிச் செய்திகளைத் தடுக்க சிறப்பு பணிக்குழு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 6 : சுங்கை பக்காப் இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் போலிச் செய்திகளைத் தடுக்க தகவல் தொடர்பு அமைச்சு சிறப்புப் பணிக்குழுவை அமைக்கவுள்ளதாக, அதன் அமைச்சர், Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத் தளங்களைக் கண்காணிப்பதன் நோக்கம் தேர்தல் பிரச்சாரங்களின் போது வெளியிடப்படும் பொறுப்பற்ற அறிக்கைகளை தவிர்ப்பதற்காகத்தான் என்று அவர் கூறினார்.

 இது அமைச்சு மட்டத்திலும்,  மலேசிய பல்லூடக ஆணையம் மற்றும் தகவல் துறை போன்ற பிற நிறுவனங்கள் மற்றும் துறைகளாலும் மேற்கொள்ளப்படுகிறது.

கடவுள் விரும்பினால், வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கு தாங்கள் ஒரு குழுவை அமைப்போம், என்று அவர் இன்று நிபோங் தெபாலில் நடந்த ஒரு நிகழ்விற்குப் பிறகு கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *