சுங்கை பக்காப் இடைத்தேர்தல் PH வேட்பாளர் இன்று இரவு அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர்: ஜூன் 12:  சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு, இன்று  இரவு 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்க்ப்ப்ட்டுள்ளது.

புத்ராஜெயா,ஸ்ரீ பெர்டானாவில்  நேற்று நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனலின் உயர்மட்டத் தலைமை சம்பந்தப்பட்ட செயலகக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக ஒற்றுமை அரசு செயலகத் தலைவர் டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி  ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இடைத்தேர்தல்  எந்திரத்தின் பணிகளை ஒருங்கிணைத்து தரப்படுத்துவதற்காக, ரபிசி ராம்லி மற்றும் செனட்டர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் ஆகியோரை ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் இயந்திர முதன்மைக் குழுவின் இணைத் தலைவர்களாக நியமிக்க கூட்டம் முடிவு செய்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பினாங்கு ஒற்றுமை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுங்கை பக்காப் மாநில இடைத்தேர்தல் கூட்டு இயக்கத் தலைவர்கள் டத்தோ டாக்டர் முகமட் அப்துல் ஹமீட் மற்றும் டத்தோ மூசா ஷேக் ஃபட்ஸிர் ஆகியோரால் வழிநடத்தப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *