PN சுங்கை பக்காப்பில் வெற்றிபெறுவது கடினம்! - சொல்கிறார் PN தலைவர்களில் ஒருவர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 20: சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பானை (PH) ஆதரிப்பார்கள் என்றும் தொகுதியில் உள்ள மலாய்க்காரர்கள் மத்தியில் பெரிக்காத்தானுக்கு ஆதரவு குறைந்துள்ளதாகவும் பெரிக்காத்தான் கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் எஃப்.எம்.டியிடம் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான்  மிகவும் வலிமையானது என்று தாம் கூறவில்லை, ஆனால் பெரிக்காத்தான் நேஷனல்  பலவீனமடைந்துள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள 40% மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை தங்களால் ஈர்க்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதியில் PH மற்றும் BN இயந்திரம் வலுவாக உள்ளது. அந்தப் பகுதிக்கான எம்.பி.யும் பிகேஆர் மந்திரிதான்  என்று நிபோங் டெபல் எம்.பி மற்றும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக்கைக் குறிப்பிட்டு அவர் கூறினார்.

பெரிக்காத்தான் கூட்டணியில்  PAS கட்சி தேர்தல் இயந்திரங்களின் வலிமையை மட்டுமே நம்ப முடியும். பெரிக்காத்தானின் மலாய்க்காரர் அல்லாதோர் கட்சியான கெராக்கான் போன்றவற்றுக்கு வலுவான கட்சி இயந்திரம் இல்லை. மேலும் மலேசிய இந்திய மக்கள் கட்சி அனுபவமற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *