ஒன்றுபட்ட மக்களால் நாடு வலுப்பெறும்! - பிரதமரின் விஷாக் தின வாழ்த்து

top-news
FREE WEBSITE AD


 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலேசியர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் ஒன்றுபடுமாறு  தமது விசாக் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஷாக் கொண்டாட்டம் உங்களை அறிவூட்டட்டும், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும், மேலும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  

மலேசியர்கள் ஒவ்வொருவருடைய கலாச்சாரங்களையும் நன்றாகப் புரிந்துகொள்ள ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும் ஒன்றுசேர வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.

பௌத்த போதனைகளில் வலியுறுத்தப்படும் உலகளாவிய நெறிமுறைகளில் ஒன்று 'அறியாமையை' நிராகரிப்பதாகும். புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும், நமது மக்களின் பலத்தை அரவணைப்பதற்கும், நமது தேசத்தை முன்னேற்றுவதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கும் ஒன்றாகப் பாடுபடுவோம் என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றுபட்ட மக்களால் இந்த நாடு வலுப்பெறும் என்பதில் தாம் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *