யூரோ கோப்பை 2024 கால்பந்து திருவிழா ஆரம்பம்!

top-news
FREE WEBSITE AD

'யூரோ' கோப்பை கால்பந்து திருவிழா நேற்று துவங்கியது.இந்த முறை சொந்த மண்ணில் ஜெர்மனி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜெர்மனியில், ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 'யூரோ' கோப்பை கால்பந்து தொடரின் 17வது சீசன் நேற்று துவங்கியது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இத்தாலி அணி 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்குகிறது. ஜார்ஜியா அணி முதன்முறையாக இத்தொடரில் விளையாடுகிறது. 

மொத்தமுள்ள 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் ஜூன் 14முதல் ஜூன் 26 வரை பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் 12 அணிகள், மூன்றாவது இடம் பிடிக்கும் 

'டாப்-4' அணிகள் என மொத்தம் 16 அணிகள் 'ரவுண்டு-16' சுற்றுக்கு ஜூன் 29  முதல் ஜூலை 2 வரை  தகுதி பெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதியில் ஜூலை 5 மற்றும் 6 பங்கேற்கும். அதன்பின் அரையிறுதி ஜூலை 9 மற்றும்10 நடத்தப்படும். இதில் வெல்லும் அணிகள் ஜூலை 14ல் பெர்லினில் நடக்கும் பைனலில் மோதும். 

கடந்த முறை போல லீக், 'நாக்-அவுட்' என மொத்தம் 51 போட்டிகள் நடக்கும். இதற்கான போட்டிகள் பெர்லின், முனிக், டார்ட்மண்ட், ஹம்பர்க், ஸ்டட்கர்ட், பிராங்க்புரூட் உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடத்தப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *