நூருல் இஸா சிலாங்கூர் மந்திரி பெசார்! அமிருடீன் பரபரப்பு பேட்டி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 22: பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் சிலாங்கூர் மந்திதி பெசார் பதவியை ஏற்க வேண்டும் என்று பரிந்துரைத்ததை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடீன் ஷாரி ஒப்புக்கொண்டார்.

நூருல் இஸ்ஸாவிடம் தான் இந்த யோசனைக்கு குரல் கொடுத்ததாகவும், அதை ஏற்றுக்கொள்வதும் எடுக்காததும் அவரின் விருப்பம் என்றும் அமிருடீன் கூறினார்.

அவரிடம் இது குறித்து தாம் சொன்னதாகவும், அவள் அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறாரா இல்லையா என்பது அவருடைய விருப்பம் என்றும் கைரி ஜமாலுதீன் மற்றும் ஷாரில் சுஃபியான் ஹம்தானின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அமிருடீன் இவ்வாறு கூறினார்.

நூருல் இஸ்ஸா சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சிலாங்கூர் மந்திரி பெசார் ஆவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கைரியின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கோம்பாக் எம்.பி.யான அமிருடீன், கூட்டரசு மட்டத்தில் கடமைகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

மத்திய அரசின் அங்கத்தில் இடம்பெற தாம் விரும்புவதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *