அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை முடிவின்றி நிறைவு; 15 மணி நேர பேச்சும் பயனளிக்கவில்லை
- Surendran Sumdraraj
- 12 Apr, 2026
இஸ்லாமாபாத், ஏப் 12-
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற நீண்ட நேர அமைதி பேச்சுவார்த்தை எந்தத் தீர்வும் இன்றி முடிவடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும், பின்னர் மேலும் நீட்டிக்கப்பட்ட போதிலும் முக்கிய பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
குறிப்பாக, ஈரானின் அணு திட்டம், ஹார்முஸ் நீரிணை கட்டுப்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இரு தரப்பும் கடும் நிலைப்பாட்டை எடுத்ததாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், “இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு அமெரிக்காவின் அதிகப்படியான கோரிக்கைகளே காரணம் என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை வெற்றியின்றி முடிவடைந்ததால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



