கோர விபத்துக்கு பிரேக் செயலிழப்பே காரணம்! பேருந்து ஓட்டுநர் வாக்குமூலம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 10: உப்சி மாணவர்கள் பலியான கோர விபத்துக்கு, பிரேக் செயலிழப்பே காரணம் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தாம் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாகவும் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

திரெங்கானுவிலிருந்து புறப்படும்போது வாகனம் நல்ல நிலையில் இருந்தபோதிலும், கிரிக்கில் உள்ள யானைக் கடக்கும் பாலத்தை பேருந்து அடைந்தபோது பிரேக்குகள் செயலிழந்ததாக 39 வயதான அமிருல் ஃபதில் சுல்கிஃப்ளி கூறினார்.

தம்மால் முடிந்த அனைத்தையும் முயற்சித்ததாகவும், ஆனால் ஹேன்பிரேக் உட்பட பேருந்தின் பிரேக் அமைப்புகள் எதுவும் வேலை செய்யவில்லை என்றும் அவர் கூறினார். பேருந்தின் கியர்களைக் கூட மாற்ற முடியவில்லை  என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் இருந்த மற்றவர்களின் வாகனங்களைக் கடந்து சென்று வேகமாகச் சென்றதற்குக் காரணம், சேதத்தைக் குறைக்கவும் மற்ற வாகனங்களுடன் மோதுவதைத் தவிர்க்கவும் தாம் அவ்வாறு செய்ததாகக் கூறினார்.

நிலைமையைக் குறைக்க் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

பிரேக்குகள் செயலிழந்ததை உணர்ந்ததும், மாணவர்கள் உடனடியாக கூச்சலிட்டதாக அவர் கூறினார்.

பின்னால் அமர்ந்திருந்த பெரும்பாலான மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர் என்றும் அமிருல் கூறினார்!

Pemandu bas kemalangan UPSI mendakwa brek gagal berfungsi ketika menuruni jambatan di Greece. Walaupun cuba sedaya upaya menghentikan kenderaan, brek termasuk handbrake tidak berfungsi. Beliau memohon maaf kepada keluarga mangsa atas kejadian itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *