போரை நிறுத்த ரஷ்யா தயார்! உக்ரைன் மௌனம் ஏன்?

top-news
FREE WEBSITE AD

போரை நிறைவு செய்வதற்காக  உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்த உக்ரைன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யா எதிர்பார்க்காத அளவுக்கு உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், ''உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ள, அதிபர் புடின் தயாரக உள்ளார் என 4 ரஷ்ய அதிகாரிகள் கூறினர். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதை சில ஐரோப்பிய நாடுகள் தடுப்பதாக புடின் கருதுகிறார்'' என தெரிவித்துள்ளது.

இது குறித்து, நிருபர்கள் கேள்விக்கு ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ, '' போரை நிறைவு செய்வதற்காக உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது. போரை நாங்கள் விரும்பவில்லை'' என பதில் அளித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *