வடகொரியாவைச் சுற்றி பெரும் ராணுவ அச்சுறுத்தல்-ரஷியாவின் கடும் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் கூட்டுப்போர் பயிற்சி குறித்த விவகாரம், வடகொரியாவின் கண்டனத்தையும், ரஷியாவின் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது.

வடகொரியா பக்கத்தில் இருந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை பிரயோகங்கள் ஆகியவை சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து கடலிலும், வானிலும் கூட்டு ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், இதை வடகொரியா தனது எதிரிகளால் நடத்தப்படும் போர் முயற்சி எனக் கருதுகிறது. இதற்கான கடும் கண்டனமாக, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், "இந்த போர் விளையாட்டை உடனடியாக கைவிடுங்கள் இல்லையெனில் எதிர்வினை கடுமையானது இருக்கும்" என எச்சரித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆவேசமான கருத்தை வெளியிட்டுள்ளார். "வடகொரியாவுக்கு எதிரான ராணுவ கூட்டணியை தென்கொரியா உருவாக்கிக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது. இது கோர விளைவுகளை ஏற்படுத்தும். இதை உடனடியாக கைவிட வேண்டும்" என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், கொரிய தீபகற்பத்தில் அமைதியைத் தகர்த்துவிடும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. அணு ஆயுதம் மற்றும் ராணுவ வலிமையின் பின்னணியை கொண்ட வலிமை பொருந்திய உலக நாடுகளிடையே மீண்டும் போர் சுழல் உருவாவது வருத்தம் அளிக்கும் விசயமாகும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *