உலகளாவிய ITசெயலிழப்பு... இழப்பீடு தாருங்கள்! டோனி பெர்ணாண்டஸ் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

சுபாங், ஜூலை 23: உலகளாவிய ஐடி செயலிழப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏர் ஏசியா குழுமத்திற்கு இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும் என்று கேபிடல் ஏ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலைமைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்ததோடு, இது விமானச்ம் சேவைகளைப் பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாம் ஏதாவது தவறு செய்தால், அதற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பது கொள்கை. அந்த வகையில், நாங்கள் உட்பட பிற விமான நிறுவனங்கள் மற்றும் பிற வணிகங்கள் இந்தச் செயலிழப்பால் நிறையவே இழந்துள்ளன.

எனவே, அவர்கள் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், இப்போதே, நாங்கள் காத்திருந்து பார்க்க வேண்டும" என்று அவர் இன்று சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் ஏர் ஏசியாவின் செயல்பாடுகளைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *