பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்; உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வைரமுத்து

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூன் 30 –

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தமிழ்நாடு அரசு மணிமண்டபம் அமைத்து அவரது நினைவை நிலைநிறுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றிய படைப்பாளிகளில் அவர் முதன்மையானவர் என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். கிராமிய வாழ்க்கை, மனித உணர்வுகள் மற்றும் தமிழ் மண்ணின் மணத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற பெருமை பாரதிராஜாவுக்கு உரியது என்று அவர் புகழாரம் சூட்டினார்.

மேலும், பாரதிராஜாவின் சாதனைகள் காலத்தால் அழியாதவை என்பதால், அவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும், அது எதிர்கால தலைமுறையினர் அவரது பங்களிப்பை அறிந்துகொள்ளும் வரலாற்றுச் சின்னமாக அமையும் என்றும் வைரமுத்து வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *