தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறிய ஸ்வியாடெக்!

top-news
FREE WEBSITE AD


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, போலந்தின் இகா ஸ்வியாடெக், 'நம்பர்-3 ஆம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் கோகோ காப் மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் காலிறுதியில் 'நம்பர்-4' வீரர் ஜெர்மனியின் ஜிவரேவ், 11வது இடத்திலுள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினவுரை சந்தித்தார். இதில் ஜிவரேவ் 6-4, 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் 7வது இடத்திலுள்ள நார்வேயின் கேஸ்பர் ரூடை சந்திக்க உள்ளார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *