குழந்தைகளின் பாலியல் காணொலி வைத்திருந்த அரசு அதிகாரி உட்பட நால்வர் கைது!

top-news

ஏப்ரல் 5,

குழந்தைகளை மையமாகக் கொண்டிருந்த பாலியல் காணொலிகளை விற்பனை செய்ததாக 26 முதல் 49 வயதுள்ள நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் ஒருவர் அரசு ஊழியர் என்றும் தேசிய காவல்துறைத் துணைத் தலைவர் Datuk Seri Ayob Khan Mydin Pitchay தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆபாசக் காணொலிகளை மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆசிய நாடுகளான Singapura, Thailand, Jepun, Hong Kong, தென் கொரியா, மலேசியா ஆகிய நாடுகளின் கூட்டு நடவடிக்கையில் குழந்தைகள் தொடர்பானப் பாலியல் காணொலிகளைப் பரப்பும் கும்பலைச் சேர்ந்த 435 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய காவல்துறைத் துணைத் தலைவர் Datuk Seri Ayob Khan Mydin Pitchay தெரிவித்தார். குழந்தைகள் பாலியல் காணொலிகளைப் பரப்புவது அதனைப் பதிவு செய்து விற்பனை செய்து வரும் கும்பலைச் சேர்ந்தவர்களைக் கைது செய்ய காவல்துறை தனிப்படை அமைத்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Empat individu termasuk penjawat awam ditahan kerana memiliki lebih 50,000 bahan penderaan seksual kanak-kanak (CSAM) dalam operasi antarabangsa Cyber Guardian. Operasi melibatkan enam negara dan seramai 435 individu ditahan, termasuk dua kes yang telah dituduh di mahkamah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *