குர்ஆனின் நகலை மிதித்ததாகக வலம் வரும் காணொளி, சிங்கப்பூர் சம்பந்தப்பட்ட பழைய காணொளி!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா: குர்ஆனை மிதித்ததாகக் கூறப்படும் மற்றொரு நபர் பற்றிய வைரலான காணொளி, சிங்கப்பூர் சம்பந்தப்பட்ட பழைய காணொளி என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக  ஆணையம் (MCMC) இன்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் சிங்கப்பூரில் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக MCMC தெரிவித்து உள்ளது.பழைய காணொளி பல்வேறு சமூக ஊடக தளங்களில் பதிவேற்றப்பட்டது பொதுமக்களின் கவலையைத் தூண்டியதாகவும், அது பரவுவதைத் தடுக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தூண்டியதாகவும் அது கூறியது.

“மலேசியாவில் அந்த வீடியோவை அணுகுவதை கட்டுப்படுத்துவது உட்பட போதுமான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக MCMC சமூக ஊடக தள வழங்குநர்களுடன், குறிப்பாக Threads, Facebook மற்றும் TikTok உடன் இணைந்து செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத உணர்வுகளைத் தொடும் உள்ளடக்கத்தைப் பரப்புவதும், நமது பல்லின சமூகத்தின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதும் பொறுப்பற்றது, மேலும் தற்போதுள்ள சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குர்ஆனின் நகலை மிதித்ததாகக் கூறி மலேசியா பல்கலைக்கழக பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா மாணவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பழைய வீடியோ  மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *