படுத்த படுக்கையாய் ஆம்புலன்ஸில் வந்த வாக்காளர்! பொதுமக்கள் வியப்பு!

top-news
FREE WEBSITE AD

குவா மூசாங், ஆகஸ்ட் 17: நெங்கிரி  சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்கும் தனது கடமையை நிறைவேற்றுவதற்காக ஐந்தாவது நிலை நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், எஸ்.கே ஜெராம் தெகோவில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு  படுக்கையில்  இருந்தபடியே வந்து வாக்களித்துச் சென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஜீஸ் மாட் இசா எனும் 63, வயதான அந்நபர் அரசு சாரா நிறுவனமான கோத்தா ராஜா கேர் ஆம்புலன்ஸ் உதவியுடன் காலை 9 மணிக்கு மையத்திற்கு வந்தார்.

அஜீஸின் 29 வயது மகன், தனது தந்தை வாக்களிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், படுக்கையில் இருந்தாலும் வாக்களிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறினார்

எனது தந்தை நீண்டகாலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த எட்டு மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்தார்.

எந்தவொரு பொதுத்தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் அவர் வாக்களிக்கத் தவறியதில்லை, ஆனால் அவரால் இனி நிற்கவோ நடக்கவோ முடியாது என்பதால் மருத்துவமனை படுக்கையில் படுத்துக் கொண்டு வாக்களிப்பது இதுவே முதல் முறை என்று தனது தந்தைக்கு பள்ளியில் அவர் வாக்களிக்க உதவினார். 


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *