போலி முதலீட்டில் RM54,950 இழந்த பெண்!

top-news

ஜூன் 11,

முகநூலில் காணப்பட்ட முதலீடு நிறுவனம் தொடர்பான விளம்பரத்தை நம்பி தனது சேமிப்புப் பணத்தை முதலீடு செய்த 32 வயது இளம்பெண் தாம் ஏமாற்றப்பட்டதாக Seri Alam, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இன்று காலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் முதற்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd. Sohaimi Ishak தெரிவித்தார். 

10 முதல் 35 விழுக்காடு லாபம் பெறலாம் என சம்மந்தப்பட்ட முகநூல் விளம்பரத்தில் குறிப்பிட்டிருப்பதை நம்பி கடந்த மே 30 ஆம் திகதி முதல் ஜுன் 3 ஆம் திகதி வரையில் 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 16 முறை பணத்தைப் பரிவர்த்தனை செய்ததாகப் பாதிக்கப்பட்ட 32 வயது இளம் பெண் புகார் அளித்துள்ளார். மொத்தமாக RM54,950 பணத்தை இழந்துள்ளதாகவும் சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் உரிமைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd. Sohaimi Ishak தெரிவித்தார்.


Seorang wanita berusia 32 tahun kerugian RM54,950 selepas terpedaya dengan iklan pelaburan palsu di Facebook. Mangsa membuat 16 transaksi ke 10 akaun bank dari 30 Mei hingga 3 Jun. Polis Seri Alam sedang menyiasat pemilik akaun terlibat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *