நான் அவர்களை திவாலாக்க விரும்புகிறேன்! – டான்ஸ்ரீ அசாம் பாக்கி

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப்டமர் 4: ஊழல் குற்றவாளிகளால் திருடப்பட்ட சொத்துகளைக் கண்டறிய மலேசியலஞ்ச  ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசியின் புலனாய்வு அணுகுமுறை மேம்படுத்தப்பட வேண்டும் என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

எம்ஏசிசியின் செயல்பாடுகள் இப்போது ஊழல் குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது மட்டுமின்றி, அவர்களை திவாலாக்குவதில் அதிக கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டு மட்டும் 1.3 பில்லியன் ரிங்கிட் கிரிமினல் சொத்துக்களை மீட்கப்பட்டதாகவும், அந்த பணம்அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அனைத்து சட்ட அமலாக்க நிறுவனங்களும் தங்கள் ஆற்றலைத் திரட்டினால், குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவதுடன், அத்தகைய குற்றவாளிகளின் திருடப்பட்ட சொத்துக்களையும் நாம் பறிமுதல் செய்யலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

'நான் அவர்களை திவாலாக்க விரும்புகிறேன்;  இது அவர்களுக்கு ஒரு 'பயமுறுத்தும் காரணி'யைக் கொண்டு வர முடியும் என்று குறிப்பிட்ட அவர்,  இதனால் ஊழல் தொடர்பான குற்றங்களைச் செய்வதற்கு முன் அவர்கள் பல முறை யோசிக்க வேண்டி வரும் என்று அவர் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *