வணிகம் செய்த 81 வெளிநாட்டினர் கைது!
- THINAGAREN SANGGAREN
- 07 Mar, 2026
மார்ச் 7,
சட்டவிரோதமாக மலேசியா தங்கி வணிகத்தை நடத்தியதாக நம்பப்படும் 81 வெளிநாட்டினர்களை ஜோகூர் மாநில குடிநுழைவு துறை கைது செய்துள்ளது. இன்று காலை ஜோகூர் pandan பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் சோதனை மேற்கொண்டதில் தொழிலாளர் உரிமம் இல்லாது வெளிநாட்டினர்கள் சமையல் பொருள்களை மலிவு விலையில் விற்பனை செய்து வந்ததாகத் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் Bangladesh, India, Indonesia, Pakistan, Myanmar, Nepal ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொழிலாளர் உரிமம் இல்லாது சட்டவிரோதமாக வேலை செய்து வந்த 81 வெளிநாட்டினர்களும் 17 முதல் 52 வயதுக்குட்பட் டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட 81 வெளிநாட்டினர்களும் மேலதிக விசாரணைக்காக Pandan குடிநுழைவு துறை அலுவலகத்தில் தடுத்து வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



