போக்குவரத்து செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்! - துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி
- Shan Siva
- 07 Dec, 2025
பெஸ்தாரி ஜெயா, டிச 7: பெஸ்தாரி
ஜெயாவில் அமைந்துள்ள தேசிய வகை ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நேர்த்தி நிறை, ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு பிரமுகராக தேசிய ஒருமைப்பாட்டு துறை
துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.
தோட்டப்புறத்தில்
ஒரு மாளிகை என்று தான் இந்த பள்ளி வர்ணிக்கப்படுகிறது. அங்கு நேரில் சென்று
பார்த்தப் போது உண்மையில் பெருமைப்படும் வகையில் தான் பள்ளி செயல்பட்டு வருகிறது
என்று சிறப்புரையாற்றிய அவர் கூறினார்.
மாணவர்கள்
எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பள்ளியின் அமைப்பு சிறப்பாகவே உள்ளன.
தலைமையாசிரியர் திருமதி மகேஸ்வரி சுப்ரமணியம் தலைமையில் இப்பள்ளி பல்வேறு
உருமாற்றங்களை கண்டுள்ளது என்று தெரிவித்தார்,
100 ஆண்டை
எட்டவிருக்கும் இந்த பள்ளி சுற்றுவட்டார தோட்டங்களின் சரித்திரப்பூர்வ சான்றாக
அமைகிறது. இத்தோட்ட பள்ளியை கட்டி காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று
அவர் கூறினார்.
தமிழ்ப்பள்ளிகளின்
வளர்ச்சிக்காக மடானி அரசாங்கம் பல உதவிகளை வழங்கி வருகிறது. எனவே, தமிப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று
அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம்
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று கூறினார்.
இந்த பள்ளிக்கு
வரக் கூடிய மாணவர்கள் போக்குவரத்து பிரச்சினையை
எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்தாண்டு முதலாம் ஆண்டிற்கு
இதுவரையில் 7 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தலைமையாசிரியர் கூறியிருந்தார்.
இன்னும் கூடுதலாக 10 மாணவர்கள் இப்பள்ளியில் பயில பதிவு செய்தால் அந்த 10
மாணவர்களுக்கான போக்குவரத்து பொறுப்பினை தாம் ஏற்றுக் கொள்வதாக துணையமைச்சர்
சரஸ்வதி வாக்குறுதி அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



