கட்டுமானப் பொருட்கள் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு குறித்து பொதுப்பணித்துறை கண்காணிக்கும்! - அமைச்சர் நந்தா லிங்கி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 4: ஜூன் மாதத்தில் டீசல் மானியம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டுமானத் துறையில் ஏற்படும் முன்னேற்றங்களை, குறிப்பாக கட்டுமானப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சு  உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக, பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது இந்தச் சிக்கலை ஆய்வு செய்து வருகிறது. எந்தவொரு கொள்கையையும் பரிசீலிக்கும் அல்லது செயல்படுத்துவதற்கு முன், கட்டுமான செலவினங்களில் ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்கும் மலேசிய புள்ளியியல் துறையால் வழங்கப்பட்ட பொருள் செலவு குறியீட்டை பகுப்பாய்வு செய்வது உட்பட விரிவான ஆராய்ச்சி அவசியம் என்று அமைச்சர்களின் கேள்வியின் போது அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *