எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கை – அச்சுறுத்தலை மன்னிக்கமாட்டேன்! - ஜொகூர் ஆட்சியாளர்

top-news
FREE WEBSITE AD


ஜொகூர், மே 31: ஜொகூர் ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், தனது போலீஸ் துணைக் காவலர்களில் ஒருவர், மாற்றுத்திறனாளி ஓட்டுநர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தை முழுமையாக விசாரிக்குமாறு காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து தரப்பினரையும் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையையும் அச்சுறுத்தலையும் தாம் மன்னிக்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவார்கள் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி அரச நிறுவனத்தை இழுக்க ஓர் இயக்கம் உள்ளது என்பதையும் தாம் அறிந்து வைத்துள்ளதாகவும், ஆனால் ஒரு வெளிப்புற பாதுகாப்பு அதிகாரியின் செயல்களை தன்னுடன் தொடர்புபடுத்துவது மற்றும் முழு அரச நிறுவனத்தையும் உட்படுத்துவது தேவையற்றது என்றும் அவர் கூறினார்!

 

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]